News March 24, 2025

காவல்துறையால் எச்சரிக்கப்பட்ட சுற்றுலா பயணி

image

ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இன்று(மார்ச்.24) தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்திய அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணியை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சுற்றுலா பயணியின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் செயல்படுகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர்

Similar News

News March 31, 2025

ராமநாதபுரம்: ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென் கடலில் இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் தலா 40 கிலோ வீதம் 5 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கைப்பற்றிய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

News March 31, 2025

இராமநாதபுரம் சரக டிஐஜி பதவியேற்பு

image

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருநெல்வேலி சரக டிஐஜியாக பணியாற்றி வந்த  மூர்த்தி ஐபிஎஸ் இராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மார்ச்.31) இராமநாதபுரத்தில் புதிய டிஐஜியாக பதவியேற்று கொண்டார்.

News March 31, 2025

மோடி வருகையை கண்டித்து போராட்டம்

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப்.6 அன்று திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச்.31) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!