News March 24, 2025

விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

விக்கிரவாண்டியில் மொபைல் போன்கள் பறிமுதல்!

image

விக்கிரவாண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்து புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 11 மொபைல் போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். நேற்று(நவ.4) விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சரவணன் மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

News November 5, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

விழுப்புரம்: பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி!

image

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர திமுக அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சைவ,வைனவ சர்ச்சை பேச்சால் இவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

error: Content is protected !!