News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News September 17, 2025
நாகை ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

கலைமகள் சபா சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் இதுகுறித்த விரிவான அறிக்கையை 19ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நேரில் ஆஜராகி ஏன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.
News September 17, 2025
நாகை: செப்:30 கடைசி நாள், கலெக்டர்

நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர செப்டம்பர் 30 கடைசி நாளாகும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் படிப்பு முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்று தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 17, 2025
நாகை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களின் விற்பனைக்கு ஏற்ப வியாபார கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சாலையோர வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வியாபார கட்டணங்களை நேரடியாக நகராட்சி கருவூலத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் இதை தவிர தனிநபர்கள் யாரிடமும் செலுத்த வேண்டாம் என நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்துள்ளார்.