News March 24, 2025
வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன் திருக்கோவில்

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 4, 2025
திருவள்ளூர்: நீரில் மூழ்கி குழந்தைகள் பலி; உதவிய CM

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் கடந்த வாரம் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகள் ரியாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் இன்று (நவ.4), ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


