News March 24, 2025
சிறந்த கிராமமாக வீராணம் தேர்வு

சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024- 2025 ஆம் ஆண்டிற்கான அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதை அடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 லட்சத்திற்கான காசோலை இன்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 14, 2025
சேலம்: 8 மாதங்களில் 2,104 பேருக்கு நாய்க்கடி!

சேலம்: ஆத்துார்,தலைவாசல்,கெங்கவல்லி,எடப்பாடி,மேட்டூர்,ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 8 மாதங்களில் மட்டும் 2,104 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்களே , தெரு நாய்கள் தொந்தரவு இருந்தால் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!