News March 24, 2025

விழுப்புரம்: மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழிக்கும் அலுவலர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ, 2 கைகள் அற்ற மாற்றுத் திறனாளி. கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியது. அது தொடர்பாக பட்டா மற்றும் வரைபடங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களாக அலைந்தும், இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று(மார்ச்.24) விழுப்பரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Similar News

News September 23, 2025

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

image

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. இந்த தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

விழுப்புரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திண்டிவனத்தில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஸ்ரீசங்கமித்ரா திருமண மண்டபத்தில் நாளை (செப்.24) நடைபெறவுள்ளது. கருத்தரங்களில், வேளாண்மை, மண் வளம், உற்பத்தி உத்திகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

News September 23, 2025

விழுப்புரம்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு கடந்த ஆண்டு செப்-மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த<> லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர்

error: Content is protected !!