News March 24, 2025
ரூ.1770 கட்டணத்தில் நீச்சல் பயிற்சி

நாகை மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பு வசதியுடன் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.1770 மட்டுமே பெறப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News October 17, 2025
நாகை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று(அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
மாசற்ற தீபாவளி; விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளியை கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் நாகூர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி, கீழ்வேளுர் போன்ற முக்கிய பகுதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியது.