News March 24, 2025

சிதம்பரம்: முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் தற்கொலை

image

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மனமுடைந்த குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பையில் தான் இறந்ததற்கான காரணம் சிவராஜ்தான் என எழுதிவைக்கப்பட்ட கடிதம் இருந்தது கண்டறியப்பட்டது.

Similar News

News December 31, 2025

கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

கடலூர்: வேகமாக வந்த பைக் மோதி மூதாட்டி பலி

image

கடலூர் மாவட்டம், வரக்கால்பட்டையை சேர்ந்தவர் கேசம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில், கேசம்மாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 31, 2025

கடலூர்: 121 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ, குற்றவாளிகள், கஞ்சா, குட்கா, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 28 குற்றவாளிகள் உள்ளிட்ட 121 பேர் குண்டர் தடுப்பு காவலில் 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். .

error: Content is protected !!