News March 24, 2025

ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (அக்.29) தா.பேட்டை ஒன்றியம் பைத்தம் பாறை பகுதியிலும், மருங்காபுரி ஒன்றியம் செவல்பட்டி பகுதியிலும், மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும் பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் துறையூர் நகராட்சி பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

திருச்சி: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK<<>> செய்க.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை

image

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தப்டுள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் கண்டறியப்பட்ட வார்டுகளில் காலை, மாலை என முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!