News March 24, 2025
திருப்பரங்குன்றம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் அதிரடி

திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது அனைவருக்கும் சொந்தம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடவுள்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது, அந்த மலை தங்களுக்கே சொந்தம் என தொல்லியல் துறை வாதிட்டது. இதையடுத்து வழக்கு ஏப்.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News August 21, 2025
ராசி பலன்கள் (21.08.2025)

➤ மேஷம் – அனுகூலம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – பகை ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – மேன்மை ➤ விருச்சிகம் – ஆர்வம் ➤ தனுசு – இன்பம் ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – முயற்சி
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.
News August 21, 2025
மாநாடு சிறக்க வேண்டி யாகம் வளர்த்த தவெக!

மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, நிர்வாகிகள் யாகம் வளர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத சடங்குகளுக்கு எதிரான பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு, யாகம் நடத்தியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் யாகம் வளர்த்த சில மணி நேரங்களிலேயே, மாநாட்டு திடலில் நிறுவப்பட்டு வந்த 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததையும் டிரோல் செய்து வருகின்றனர்.