News March 24, 2025
மாநிலங்களவையில் கடும் கூச்சல்.. அவை ஒத்திவைப்பு

மாநிலங்களவை இன்று கூடியதும் பாஜகவினர், கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேச்சை கண்டித்து முழக்கமிட்டனர். டி.கே.சிவக்குமார் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்பு சட்டத்தை மாற்றலாம் என பேசியது கண்டனத்துக்குரியது. என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் பதில் அளித்த போது, பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
Similar News
News July 10, 2025
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாகனக் கடன்.. அரசு அறிவிப்பு

வாகனம் மற்றும் கணினி வாங்க கடன் பெற விரும்பும் ஆசிரியர்கள் உரிய விவரங்களை சமர்ப்பிக்கும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறையின் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கடன் பெற விரும்புவோர் தற்போது அளிக்கப்பட்டுள்ள புதிய படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
News July 10, 2025
அகமதாபாத் விமான விபத்து.. இந்த வாரம் முதல் அறிக்கை

அகமதாபாத் விமானம் விபத்து குறித்த முதல்நிலை விசாரணை அறிக்கை இந்த வார இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 260 பேர் பலியான இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் இயக்குநர், போக்குவரத்து, சுற்றுலா விவகார நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது அவர், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், முதல்நிலை அறிக்கை விரைவில் தாக்கலாகும் என்றார்.
News July 10, 2025
1,996 ஆசிரியர் பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க

அரசுப் பள்ளிகளில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் 216, ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233, வேதியியல் 217 பணியிடங்கள் உள்பட 1996 இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.