News March 24, 2025
2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் கீழ் நடைபெற்ற வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாமில் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. கடந்த மார்ச்.17ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 6 முதல் 12 மாதம் உள்ள 36,715 குழந்தைகளுக்கும், 1 முதல் 3 வயது வரை உள்ள 89,994 குழந்தைகள் என மொத்தம் 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
தக்காளி காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளிடம் அதிகளவு காணப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதார துறையினர் இந்த காய்ச்சல் பொதுவாக சுகாதாரம் இல்லாததால் பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
News April 18, 2025
கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.
News April 18, 2025
மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை!

மருதமலை முருகன் கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், புதிதாக 184 அடிஉயர முருகன் சிலையும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். அவ்வாறு அமையப்பெற்றால் உலகில் மிகப்பெரிய முருகன் சிலை மருதமலையில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.