News March 24, 2025

மார்ச் முடிவதற்குள் காரை வாங்கிவிடுங்கள்!

image

ஏப்ரல் முதல் கார்களின் விலை உயரப்போகிறது. மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா, ஹுண்டாய் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை 3% முதல் 4% வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3% வரை அதிகரித்ததால், இறக்குமதி பொருட்கள் விலை உயர்வை சந்தித்தன. இதன் காரணமாகவே கார்களின் விலையும் வேகம் எடுத்திருக்கின்றன. மார்ச் முடிவதற்குள் காரை வாங்கிவிடுங்கள்!

Similar News

News August 7, 2025

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

image

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.

News August 7, 2025

வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

image

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்‌ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

image

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

error: Content is protected !!