News March 24, 2025
வனப்பகுதியில் உருவாகி வரும் இன்னொரு ‘வீரப்பன்’

தமிழ்நாடு – கர்நாடகா வனத்துறைக்கு போக்கு காட்டிவரும் செந்தில் என்பவரை இன்னொரு ‘வீரப்பன்’ என கூறுகின்றனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த செந்தில், யானைகளை வேட்டையாடி தந்தங்களைக் கடத்தியுள்ளான். அதிகாரிகள் பலருக்கும் மான் கறியை விருந்து படைத்ததும் தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிய செந்தில், தப்பியோடிய நிலையில் அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News July 10, 2025
500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் intel

intel நிறுவனம் USA-ல் உள்ள ஓரிகன் அலுவலகத்தில் இருந்து 529 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகச் செலவை குறைக்கும் நோக்கிலும், Chip துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, AI-ன் மூலம் HR வேலைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கத்தை கையிலெடுத்திருந்தது.
News July 10, 2025
பாமகவில் பதவிக்கு வரும் அடுத்த வாரிசு?

அன்புமணி – ராமதாஸ் இடையேயான அதிகாரப் போட்டியில் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அவரது சகோதரியான காந்திமதியை களமிறக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பாமகவில் காந்திமதிக்கு பதவி வழங்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, போகப்போக தெரியும் என ராமதாஸ் பாடல் பாடியபடி பதிலளித்துள்ளார். ஒருவேளை இருக்குமோ?
News July 10, 2025
கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி மரணம்

திருமணமாகி 3 மாதத்தில் உயிரிழந்த சென்னை வழக்கறிஞர் கவிதா குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி எனத் தெரியவந்துள்ளது. மாரடைப்பால் கவிதா உயிரிழந்ததாக கணவன் வீட்டார் கூறிய நிலையில், தனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என கவிதாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.