News March 24, 2025

இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

image

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News April 13, 2025

மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஸ்பெஷல் ஆப்பரேஷன்

image

தமிழக காவல்துறை இயக்குனர் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஸ்பெஷல் ஆப்ரேஷன் என்ற நடவடிக்கையில் அதிரடி வாகன சோதனைகளை செய்ய அறிவுறுத்தியதின்படி, இன்று இரவு மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், திருச்சி மாநகரில் மிக முக்கிய 38 சந்திப்புகளில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திடீர் ஸ்பெஷல் கார்ப்பரேஷன் செய்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News April 13, 2025

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

image

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் அம்மனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். அம்மனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திருச்சியில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

image

தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!