News March 24, 2025
சேலத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி சிமெண்ட்

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மூன்று குடோன்களில் பிரபல நிறுவனங்களில் காலாவதியான சிமென்ட் கட்டிகளை கொண்டு வந்து, அதனை அரைத்து போலியான சிமெண்ட் தயாரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் மூட்டை சிமெண்ட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Similar News
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 14, 2025
சேலம்: 8 மாதங்களில் 2,104 பேருக்கு நாய்க்கடி!

சேலம்: ஆத்துார்,தலைவாசல்,கெங்கவல்லி,எடப்பாடி,மேட்டூர்,ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 8 மாதங்களில் மட்டும் 2,104 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்களே , தெரு நாய்கள் தொந்தரவு இருந்தால் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.