News March 24, 2025
17 வயது சிறுவனை 30 முறை வன்கொடுமை செய்த பெண்!

ஜெயிலில் 17 வயது சிறுவனை, 47 வயது பெண் டாக்டர் ஒருவர் 30 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. USAவின் ஸ்டேடன் தீவில் உள்ள சிறையில் ‘தெரபி’ என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் புகார் அளிக்க, அந்த டாக்டர் மாயா ஹேய்ஸ் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்..
Similar News
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 29, 2025
குறைகளை களையவே ஆணையம்: அருணா ஜெகதீசன்

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரூருக்கு சென்று விசாரணையை துவக்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், குறைபாடுகளை களைவதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பரிந்துரைப்போம் என்றார்.
News September 29, 2025
9-வது முறையாக சாம்பியனான இந்தியா

பாக்., ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக, 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி டைட்டிலை தட்டிச் சென்றது. டி20 வடிவிலான ஆசிய கோப்பையில் இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.