News March 24, 2025
காலையில் பெண்கள் பால் வாங்க வருவதில்லை

அதிகாலையில் பால் வாங்க வரும் பெண்களுக்கு ‘கல்ப்ரிட்ஸ்’ தொல்லை உள்ளதால், பால் விற்பனை நேரம் மாற்றப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பெண்கள் அதிகாலை நேரத்தில், ஆவின் பூத்திற்கு பால் வாங்க வருவது அபூர்வமானது. இதை ராஜகண்ணப்பன் அறியாமல் இருப்பது வியப்பளிக்கிறது. எனவே, சரியான தகவல்களை ஆராய்ந்து, அவர் பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
Similar News
News March 27, 2025
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்குக்கு திடீர் தடை!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியாகும் தவறான கருத்து, ஆபாசப் படங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நோக்கில் இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. பேஸ்புக்கிற்குத் தடை விதிப்பதன் மூலம், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசு முடக்குவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
News March 27, 2025
2 நாள்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெப்ப பாதிப்பைத் தவிர்க்க பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறி வெளியில் செல்வோர் குடிநீர், குடை ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.. SHARE IT
News March 27, 2025
ராகுல் சொல்வதில் உண்மையில்லை: பாஜக MP

ராகுல் நாட்டிற்கு தவறான தகவலை தருகிறார் என பாஜக MP ஜெகதாம்பிகா பால் சாடியுள்ளார். அவையில் தன்னை பேச அனுமதிப்பதே இல்லை என ராகுல் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரை பேசக்கூடாது என ஒருவரும் தடுப்பதில்லை என ஜெகதாம்பிகா விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது ராகுல் ஈடுபாடு காட்டுவதில்லை. பிற காங்கிரஸ் MPக்கள் பேசும்போது, அவரால் மட்டும் ஏன் பேச முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.