News March 24, 2025
திருப்பத்தூர்: வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருப்பத்தூர், இன்று (டிச.9) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை திருப்பத்தூரில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.
News December 9, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள் இந்த லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
திருப்பத்தூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


