News March 24, 2025
தலையில் கல் விழுந்து சிறுமி பலி

விழுப்புரம் மாவட்டம், டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 35. இவரது மகள் காயத்ரி(10). நேற்று இவர், தனது தாயுடன் அப்பகுதி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். சங்கர் என்பவர் ஓடையில் இருந்த பாறைகளை ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்து தகர்த்தார். அப்போது, சிறுமியின் தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News September 23, 2025
விழுப்புரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

திண்டிவனத்தில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஸ்ரீசங்கமித்ரா திருமண மண்டபத்தில் நாளை (செப்.24) நடைபெறவுள்ளது. கருத்தரங்களில், வேளாண்மை, மண் வளம், உற்பத்தி உத்திகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
News September 23, 2025
விழுப்புரம்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு கடந்த ஆண்டு செப்-மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த<