News March 24, 2025

கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

image

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Similar News

News September 23, 2025

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ஆதித்யா (20) இவர் இருசக்கர வாகனத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து அவர் மீது மோதியதில் காயமடைந்து விஷ்ணு உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து கிழக்குப் புலனாய்வு காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் குமார் (38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

விதிமீறலில் ஈடுபட்ட டிரைவரின் லைசன்ஸ் 7 நாள் தடை!

image

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சத்யஸ்ரீ என்ற தனியார் பேருந்து சில தினங்களுக்கு முன் காரமடையில் நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எதிர் திசையில் பேருந்தை டிரைவர் இயக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் தனியார் பேருந்து டிரைவரின் லைசென்ஸ் மீது ஏழு நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!