News March 24, 2025

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

image

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன்(30) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க கரும்பு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சிலம்பரசன் பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

அரியலூர்: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

image

அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிக்கோரை காலனி தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25), கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.கைகாட்டி அருகே கோரைக்குழியைச் சேர்ந்த பிச்சைபிள்ளை (55) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக ஆகாஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News October 24, 2025

அரியலூர்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட கொள்ளிடம் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோர பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிகள் துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!