News March 24, 2025
நீலகிரி: கழுத்தை நெரித்து மனைவியைக் கொன்ற கணவன்

நீலகிரி: எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – கல்யாணி தம்பதி. தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களில் கல்யாணி கடந்த மார்ச் 21ஆம் தேதி காலை உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலன் நாராயணனிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாராயணன் (50) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
News November 8, 2025
நீலகிரியில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு!

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரி: 4 மாதங்களில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.


