News March 24, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். *பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். *உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

Similar News

News March 29, 2025

ஸ்டாலின் vs விஜய்: மக்கள் யார் பக்கம்?

image

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலினையே 27% மக்கள் விரும்புவது CVoter நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு 18% மக்கள் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10% பேரும், அண்ணாமலைக்கு 9% பேரும் ஆதரவாக உள்ளனர். இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய் 2ஆம் இடம் பிடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

News March 29, 2025

மக்களிடம் கொள்ளை போன ₹22,000 கோடி மீட்பு: பிரதமர்

image

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

News March 29, 2025

சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்?

image

தர்பூசணியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அதிகமாக இருந்தாலும், 120 கிராம் என்ற அளவில், அதாவது 1 கப் சாப்பிடலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மீடியம் சைஸ் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, முக்கால் கப் முலாம்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி தாராளமாக சாப்பிடக்கூடியதாக, ஆன்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த நாவல்பழம் உள்ளது. மாம்பழங்களை அளவுடன் சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!