News March 24, 2025
6 நாட்களுக்கு பின் கலவரம் ஓய்ந்தது

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி சில அமைப்புகள் தொடங்கிய போராட்டம் பின் கலவரத்தில் முடிந்தது. குறிப்பாக நாக்பூரில் கடந்த 17-ம் தேதி பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2025
இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.
News March 26, 2025
BREAKING: நாளை ஸ்டிரைக்.. சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 26, 2025
ஷூட்டிங்கில் காதல்.. மனோஜின் மனைவி யார் தெரியுமா?

மறைந்த நடிகர் மனோஜ் ‘சாதுரியன்’ படத்தில் நடித்தபோது உடன் நடித்த கேரள நடிகையான நந்தனாவுடன் காதலில் விழுந்தார். நந்தனா தமிழில் ABCD, சக்சஸ், சாதுரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனோஜின் பிரிவால் அவரது மனைவி, மகள்கள் கண்ணீர் சிந்தும் காட்சி காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.