News March 24, 2025
மகிழ்ச்சியான மனநிலைக்கு தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது, மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக, மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 26, 2025
தனஸ்ரீயை கடுமையாக சாடிய ரோஹித் மனைவி?

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, தனஸ்ரீயை ‘கோல்டு டிக்கர்’ என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகியுள்ளது. ‘கோல்டு டிக்கர்’ என்பது, பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடன் உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்.
News March 26, 2025
அதிமுகவில் ராஜ்யசபா சீட்டு யாருக்கு?

ADMK கூட்டணியில் ராஜ்யசபா சீட்டைப் பெற DMDK, PMK இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் ஜூன் மாதம் காலியாக உள்ள 6 இடங்களில், 4 திமுகவுக்கு உறுதியானது. மீதமுள்ள இரண்டில் ஒரு சீட்டை அதிமுகவும், மற்றொன்றை கூட்டணிக் கட்சிக்கும் ஒதுக்க உள்ளது. கடந்த முறை PMK பெற்ற நிலையில், இம்முறை DMDK தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. ஆனால், ADMK மீண்டும் NDAவில் இணைவது உறுதியானதால், PMK அந்த சீட்டைப் பெற முயல்கிறதாம்.
News March 26, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா: ஏப்.6ல் TN வருகிறார் பிரதமர்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்.