News March 24, 2025
பார்க்கில் பிணமாக தொங்கிய ஜோடி… தலைநகரில் அதிர்ச்சி

பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, அங்குள்ள மரத்தில் 2 பேர் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இந்த சம்பவம் டெல்லி மான் பூங்காவில் நடந்துள்ளது. 17 வயது சிறுவன், சிறுமி ஆகியோர் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றியுள்ளனர். தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News March 26, 2025
தனஸ்ரீயை கடுமையாக சாடிய ரோஹித் மனைவி?

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, தனஸ்ரீயை ‘கோல்டு டிக்கர்’ என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகியுள்ளது. ‘கோல்டு டிக்கர்’ என்பது, பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடன் உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்.
News March 26, 2025
அதிமுகவில் ராஜ்யசபா சீட்டு யாருக்கு?

ADMK கூட்டணியில் ராஜ்யசபா சீட்டைப் பெற DMDK, PMK இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் ஜூன் மாதம் காலியாக உள்ள 6 இடங்களில், 4 திமுகவுக்கு உறுதியானது. மீதமுள்ள இரண்டில் ஒரு சீட்டை அதிமுகவும், மற்றொன்றை கூட்டணிக் கட்சிக்கும் ஒதுக்க உள்ளது. கடந்த முறை PMK பெற்ற நிலையில், இம்முறை DMDK தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. ஆனால், ADMK மீண்டும் NDAவில் இணைவது உறுதியானதால், PMK அந்த சீட்டைப் பெற முயல்கிறதாம்.
News March 26, 2025
பாம்பன் பாலம் திறப்பு விழா: ஏப்.6ல் TN வருகிறார் பிரதமர்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப். 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார். முன்பாக 5 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பாம்பன் வருகிறார். புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் ஆளுநர் ரவி, CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் ராமேஸ்வரத்திற்கும் பிரதமர் செல்கிறார்.