News March 23, 2025
புதிய பாம்பன் பாலம்: PM மோடி திறந்து வைப்பார்

பாம்பன் புதிய ரயில் பாலம் 2 வாரத்தில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகே ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நிறைவடையும் என்றும், பழைய பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 13, 2025
கூலி பட டிக்கெட் ₹100 வரை அதிகமாக வசூலிக்க அனுமதி

நேற்று முதலே ஆந்திரா & தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ‘கூலி’ பட டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகிவிட்டது. இந்நிலையில், இப்பட டிக்கெட்டை கூடுதலாக ₹100 வரை விற்பனை செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஆக.14 – 23 வரை ஒரு திரை கொண்ட தியேட்டர்களில் ₹75, மல்டிபிளக்ஸ்களில் ₹100 என கூடுதலாக வசூலிக்கலாம். அதேபோல் ‘WAR 2’ படத்திற்கு ₹500 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
அதிமுக கூட்டணியில் டிடிவி? இபிஎஸ் தடாலடி பதில்

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து வெளியேறியது உள்கட்சி விவகாரம்; அதை வெளியே சொல்ல முடியாது என்று இபிஎஸ் பதிலளித்துள்ளார். மேலும், ஒரே மேடையில் TTV, EPS இணைவார்கள் என நயினார் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, என்னிடம் ஏன் கேக்குறீங்க.. அதை அவரிடமே (நயினார்) கேளுங்க எனக் கூறிய அவர், யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியது நாங்கள்தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
News August 13, 2025
தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு & காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இருப்பினும், இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘ஆபரேஷன் அகல்’-ன் ஒரு பகுதியாக உரி பகுதியை சுற்றி வளைத்து ராணுவம் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தியுள்ளது.