News March 23, 2025
பெண் டாக்டர் சுட்டுக்கொலை!

பீகாரில் பெண் டாக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஏசியா தனியார் ஹாஸ்பிடல் இயக்குநராக இருக்கும் ஷுர்பி ராஜை (35), மர்மநபர்கள் 6 பேர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். நோயாளிகளை போல நடித்து அவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News March 26, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶ மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள் ▶ உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது ▶ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது ▶ அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.
News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
News March 26, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1964 – வட அமெரிக்காவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 125 பேர் உயிரிழந்தனர்.
1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2016 – லாகூரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலியானார்கள்.