News March 23, 2025
சிவகங்கையில் இந்த கோயிலுக்கு போங்க.. இது தீரும்

சிவகங்கை கண்டுபட்டியில் மேற்கூரை கூட அமைக்கப்படாமல் அமைந்துள்ளது குடியிருப்பு காளியம்மன் கோயில். அம்மனின் வலது புறத்தில் புற்றும், இடதில் துர்க்கையம்மன் சன்னதியும், எதிரே 500 ஆண்டு பழமையான நாவல் மரமும் தல விருட்சமாக காட்சியளிக்கும்.முகத்தில் சரும பிரச்னை நீங்க கண்ணாடி கட்டுவதும், குழந்தை வரத்திற்கு முந்தானையை கிழித்து தொட்டில் கட்டுவதும், திருமணமாகாதவர்கள் வளையல் வாங்கி கட்டுவதும் ஐதீகமாக உள்ளது.
Similar News
News April 14, 2025
தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 13, 2025
சிவகங்கை: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
News April 13, 2025
திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோவில் வரலாறு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் திருநோக்கிய அழகியநாதர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம். துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே தலம் இதுவேயாகும். பிரதோஷத்தின் போது இங்குள்ள இரண்டு மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.