News March 23, 2025
கண் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டதன் மூலம் மீண்டும் பார்வை பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போதும் கூட, கண் பிரச்சனைகள் உள்ள எவரும் இங்குள்ள பெருமாளை வழிபட்டால் அது குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரஹ்தன ஸ்தலம் இது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டு: பாமக முன்னாள் நிர்வாகி படுகொலை

செங்கல்பட்டு அருகே, இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வாசு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்து வந்த இவர், லாரியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிக்காரணமாக கொலை நடைபெற்றதா என, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 16, 2025
செங்கல்பட்டு: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.
News September 16, 2025
தாம்பரம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த நிஷாயுதின் (30) என்பது தெரியவந்தது.