News March 23, 2025
ரஷ்யாவின் ட்ரோன் மழை.. தாக்குதலில் மூவர் பலி

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் உக்ரைனை முழுமையாக அழித்தே தீருவேன் என ரஷ்யா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கீவ்வில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உக்ரைன் அனுப்பிய 147 ட்ரோன்களில் 97 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.
Similar News
News March 26, 2025
இன்றைய (மார்ச்.26) நல்ல நேரம்

▶மார்ச் – 26 ▶பங்குனி – 12 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.42
News March 26, 2025
அச்சச்சோ அத மறந்துட்டனே… பாதியில் திரும்பிய விமானம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம். இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.
News March 26, 2025
ஒடிசாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

ஒடிசாவில் சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர். சபாநாயகர் அவர்களை எச்சரித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.