News March 23, 2025
சேப்பாக்கத்தில் விசில் போட ரெடியா…!

ஐபிஎல் தொடரில் CSK, MI அணிகள் மோதினால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சேப்பாக்கத்தில் இன்றிரவு CSK vs MI போட்டி நடைபெற உள்ளது. தல தோனியின் தரிசனத்திற்காக இப்போதே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அனிருத் இசை நிகழ்ச்சியுடன் போட்டி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். விசில் போட ரெடியா?
Similar News
News March 28, 2025
IPL 2025: RCBயை பழித்தீர்க்குமா CSK..?

IPL தொடரில் இன்று, CSK – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கடந்த ஆண்டு Playoff வாய்ப்பைக் கெடுத்த RCBயை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால், போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. யாரு ஜெயிப்பா என நினைக்கிறீங்க?
News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
News March 28, 2025
தினமும் 15-16 மணி நேரம் வேலை.. மரணம்!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணை CEO ஹான் ஜாங் ஜி (63), அதீத வேலை பிரஷரால் ஏற்பட்ட மாரடைப்பாலே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 15- 16 மணி நேரம் வேலை செய்ததே அவருக்கு தீவிர உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் மொபைல், லேப்டாப் ஸ்கிரீன் பார்த்ததன் காரணமாகவே, கடந்த 2023ல் அவருக்கு நரம்பியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல்நிலை மோசமடைந்துள்ளது.