News March 23, 2025
‘அச்சமில்லாத முயற்சி’… தியாகிகள் நாளில் PM உருக்கம்!

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள், தியாகிகள் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 3 பேரின் உயர்ந்த தியாகத்தை நாடு இன்று நினைவுகூர்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலை, நீதிக்கான அவர்களின் அச்சம் இல்லாத முயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 28, 2025
தவெகவின் முதல் பொதுக்குழு.. என்ன பேசுவார் விஜய்?

TVK முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் சூழலில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. திமுக, பாஜகவை விமர்சித்து வரும் விஜய், இன்றும் அதனை தொடருவார் என்கின்றனர். அதே நேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படும் சூழலில், இனி அதிமுகவையும் அட்டாக் செய்வார் எனக் கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்!. விஜய் என்ன பேசுவார் என நினைக்குறீங்க?
News March 28, 2025
டெய்லி மேட்ச் பாக்குறீங்களா? கொஞ்சம் உஷார்!

IPL ஜுரம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. டெய்லி மேட்ச் பார்ப்பதை வழக்கமாக கொள்ளும் பலர், ஒரு மேட்சின் முடிவை, ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது மூளையில் மகிழ்ச்சி, மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் டீம் தோற்றுவிட்டால், பலரும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இந்த வெற்றி தோல்விகள் தற்காலிகமானது தான் என்பதை உணருங்கள்.
News March 28, 2025
திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறதா தேமுதிக?

தேமுதிகவின் அண்மைக்கால நகர்வுகள் DMK கூட்டணியில் சேருவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ராஜ்யசபா சீட்டு விவகாரத்திலிருந்து அதிமுகவுடன் சற்று விலகியிருக்கும் பிரேமலதா விஜயகாந்த், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். குறிப்பாக நேற்று முன்தினம் சென்னையில் நடந்த என்கவுன்டரை பாராட்டியதைக் கூட, பலரும் கூட்டணி கணக்கு என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?