News March 23, 2025

1 மாம்பழம் ரூ.10,000… விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

image

கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதை பார்த்திருப்போம். அதற்கு மாறாக தெலங்கானா விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயி சுமன்பாய், உலகிலேயே விலையுயர்ந்த 10 மியாசாகி வகை மாமரக் கன்றுகளை நட்டுள்ளார். தற்போது, அவை காய்க்கத் தொடங்கியுள்ளன. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.10,000 வரை விலை போகிறதாம். சுமன்பாய் காட்டில் பண மழைதான்!

Similar News

News March 28, 2025

வென்றானா வீர தீர சூரன் -2? Review & Rating

image

2 பவர்ஃபுல் கேரக்டர்களுக்கு மத்தியில் சிக்கும் காளி (விக்ரம்) என்ன ஆகிறார் என்பதே கதைக்களம். பிளஸ்: ஆக்சன் காட்சிகளும், அதற்கான Build-up காட்சிகள் அசத்தல். ‘கமர்சியல்’ விக்ரமை மீண்டும் கொண்டு வந்து இயக்குநர் வென்றுவிட்டார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்சனின் உச்சம். மியூசிக், ஒளிப்பதிவு சிறப்பு. இன்டர்வெல் சூப்பர் சர்ப்ரைஸ். மைன்ஸ்: Flashback காட்சிகள் மட்டும் கொஞ்சம் மெதுவாக போகிறது. Rating: 3/5.

News March 28, 2025

மகளிர் உரிமைத்தொகை விரைவில் விரிவாக்கம்: Dy CM

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி குடும்பத்தினர் மாதந்தோறும் ₹1,000 பெற்று வருவதாகக் கூறிய அவர், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். உங்கள் குடும்பத்திற்கு ₹1,000 வருகிறதா?

News March 28, 2025

மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்த கணவர்!

image

பெங்களூருவில் மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராகேஷை, அவரது மனைவி கௌரி அனில் சம்பேகர் சண்டை ஏற்படும் போதெல்லாம் அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரத்தில் இப்படி செய்ததாகக் கூறியுள்ளார். காரில் மயக்க நிலையில் கிடந்த ராகேஷை கைது செய்த போலீசார், சிகிச்சைக்குப் பிறகு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!