News March 23, 2025
திமுக அரசு நல்லா குறட்டை விட்டு தூங்குது: அன்புமணி

மதுரை தனக்கன்குளத்தில் நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 26, 2025
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை… கோர்ட் அதிரடி தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுமிதாவின் கழுத்தை நெரித்து அந்த கொலை செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
News March 26, 2025
பாகிஸ்தானை மீண்டும் ஊதி தள்ளிய நியூசிலாந்து

தொடர் தோல்வியால் துவண்டு போன பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏற்கெனவே தொடரை இழந்த அந்த அணி கடைசி போட்டியிலும் சொதப்பியது. தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் டிம் சீஃபர்ட் 97 ரன்கள் விளாச 10 ஓவரில் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற்று தொடரை 4 – 1 என கைப்பற்றியது.
News March 26, 2025
கடைசி வரை நிறைவேறாத மனோஜின் ஆசை!

48 வயதில் மாரடைப்பால் மறைந்த நடிகர் மனோஜின் ஒரு ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது. தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1978-ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மனோஜ் விரும்பினார். சிம்பு, ஷ்ருதிஹாசனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படமாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே மனோஜ் மறைந்துவிட்டார்.