News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Similar News
News March 28, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (28.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE பண்னுங்க.
News March 28, 2025
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என கூறியதால் பாம் ஸ்குவாட் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனை முடிந்த பிறகே இது பொய்யான மிரட்டலா என்பது குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அழைப்பு வந்த எண்ணை வைத்து யார் அந்த நபர் என அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.
News March 28, 2025
குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வு

சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவை நம் மனதில் இருந்து நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.