News March 23, 2025
கள்ளகாதலியுடன் உல்லாசம்: மனைவியின் தரமான செய்க

தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (மார்.21), கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெண் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி இப்படி பிளான் போட்டு சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.
Similar News
News March 29, 2025
காற்று மாசுபாடு: ரூ.5 லட்சம் வரை அபராதம்

சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய சிசிடிவி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
News March 29, 2025
நீட் தேர்வு அச்சம்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு தயாராகி வந்த இவர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வரவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு பயந்து நேற்று (மார்.28) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளன ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.