News March 23, 2025
தமிழன் ‘தமிழ்நாட்டை’ உருவாக்கவில்லை: சிபிஆர்

தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள், அதைப் பின்பற்றினர்; இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள், வரலாற்றை சிபிஆர் திரித்து சொல்வதாக விமர்சிக்கின்றனர்.
Similar News
News March 29, 2025
KKR vs LSG மேட்ச் தேதி மாற்றம்.. ஏன் தெரியுமா?

வரும் ஏப்.6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த KKR vs LSG அணிகளுக்கு இடையேயான போட்டி, ஏப்.8 மதியம் 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்.6ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் யாத்திரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசாரால் மைதானத்திற்கும், வீரர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால், போட்டி மாற்றப்பட்டுள்ளது.
News March 29, 2025
இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
News March 29, 2025
மார்ச் 29: வரலாற்றில் இன்று

*1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது. *1857 – கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே, பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். *2007 – கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.