News March 23, 2025
கிரிக்கெட் ரசிகர்கள் Safetyக்கு ‘சென்னை சிங்கம்’

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் CSK – MI இடையே நடக்கும் எல் கிளாசிக்கோ போட்டியை காண திரளான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் IPL QR-CODE’ என்ற நவீன வசதியை சென்னை போலீஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த QR-CODE மூலம் மக்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News March 29, 2025
IPL 2025யை ‘இந்த’ அணி வெல்லும்! ஐஐடி பாபா கணிப்பு!

மகாகும்பமேளாவில் தோன்றி, IIT பாபா திடீரென வைரலாகினார். இவர், IPL 2025 தொடரை RCB அணி தான் வெல்லும் என கணித்துள்ளார். தொடரை வெல்லும் எனக் கூறியும் RCB ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர். விஷயம் என்னவென்றால், IIT பாபா CT தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் எனக் கணித்தார். ஆனால், அத்தொடரில் பாகிஸ்தான் ரொம்ப மோசமாக தோற்றது. அது ஞாபகம் வர, தற்போது RCB ரசிகர்கள் தவிக்கிறார்கள். யார் ஜெயிக்க போறாங்க?
News March 29, 2025
என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
News March 29, 2025
போதைக்கு அடிமையாகி Suicide செய்யும் இளைஞர்கள்

மாநிலத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல ஆண்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். குறிப்பாக, வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக மன நல மருத்துவ சங்கத்தின் EX தலைவர் பன்னீர் செல்வம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.