News March 23, 2025

நீதிபதி வர்மாவை விசாரிக்க கமிட்டி

image

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை விசாரிக்க, 3 ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார். இந்த விசாரணை காலத்தில் வர்மா, எந்த சட்டப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படைத்தன்மைகாக, இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.

Similar News

News March 26, 2025

திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

image

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 26, 2025

திமுக கூட்டணி கட்சிகளை குறி வைக்கும் இபிஎஸ்?

image

ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்க போகிறதா என்ன?; தேர்தல் நேரத்தில் எல்லாம் நடக்கும் என்று இபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, தவாக, விசிக, கம்யூ., கட்சிகள் திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூற தொடங்கியுள்ளன. இதையும், இபிஎஸ் சொல்வதையும் இணைத்து பார்த்தால் கணக்கு புரிகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், இந்த கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்பது சந்தேகமே.

News March 26, 2025

இரானி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

image

சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து 100 சிசிடிவிக்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கமிஷனர் அருண் கூறியுள்ளார். பிடிபட்ட 3 குற்றவாளிகளும் ‘இரானி கொள்ளையர்கள்’ மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் திறமையானவர்கள் என்றார். நகைகள், பைக்கை பறிமுதல் செய்ய சென்றபோது தப்பிக்க முயன்றதால் <<15888455>>ஜாபரை<<>> சுட்டதாகக் கூறிய அவர், 26 சவரன் நகை, துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!