News March 23, 2025
பிரபல குட்கா வியாபாரியான ‘சொர்ணாக்கா’ கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்ப்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அண்மையில் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, பிரபல குட்கா வியாபாரி சொர்ணாக்காவை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். சோதனையில் சிக்கிய மது மற்றும் குட்கா பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 6, 2025
நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். மேலும் விடுபட்ட மகளிருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் நாளை முதல் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை காண விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தை (044-2723714, 044 – 27237124) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961963>>தொடர்ச்சி<<>>