News March 23, 2025

ஏப்ரல் 1க்கு முன்பாக புதிய டோல் கொள்கை

image

நியாயமான சலுகைகளுடன் கூடிய புதிய டோல் கொள்கையை ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கட்டணம் குறித்த கவலைகளை தீர்ப்பதற்கும், சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் ₹64,809 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இது முந்தய ஆண்டை விட 35% அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

image

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!

News July 9, 2025

4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

image

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.

error: Content is protected !!