News March 23, 2025

வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி பலி

image

வளத்தி அடுத்த சண்டிசாட்சி தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நீலாம்பூண்டியில் செஞ்சி சேத்பட் சாலையில் நேற்று காலை கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் தீபிகாவின் பின்னால் மோதியதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

கடன் தொல்லையால் திமுக கிளைச் செயலாளர் தற்கொலை

image

திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் தி.மு.க., கிளைச் செயலாளர். இவர் சமீபத்தில் அவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2025

படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பத்தைச் சோ்ந்தவர் மீனவா் மணிவண்ணன்(36). இவா் கடந்த 18ம் தேதி ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கரைப் பகுதியிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் சென்றபோது கடல் அலையின் சீற்றத்தில் படகு சிக்கி கவிழ்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர் நேற்று உயிரிழந்தாா். புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!