News March 23, 2025

மனைவியை சமரசம் செய்ய சென்ற போது மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

image

உச்சிப்புளி, மோகன்குமார்(36), பிரியங்கா தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மோகன்குமார் மனைவியை சமரசம் செய்து அழைத்து வர தனது உறவினர்கள் காளிதாஸ், வானீஸ்வரன் ஆகியோருடன் முத்துப்பேட்டை சென்றார். சமரசம் பேசியதில் வாக்குவாதம் முற்றியதில் பிரியங்கா தரப்பினர் மூவருக்கு கத்தி குத்து ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரை திருப்புல்லாணி போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News March 29, 2025

429 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 29, 2025

பாம்பன் பாலத்தில் நாளை திறப்பு விழா ஒத்திகை

image

பாம்பனில் புதிய ரயில் பாலத்திற்கான திறப்பு விழா ஒத்திகை நாளை மார்ச்.29 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் படகுகள் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் ஒத்திகை நடைபெறும் போது ஆற்றுப் பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது மீன்வளத்துறை ரயில்வே மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

ராமநாதபுர மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (மார்ச்.28) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!