News March 23, 2025

குலசேகரப்புதூரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

image

குலசேகரப்புதூரைச் சேர்ந்தவர் வைரவன். இவரும், இவரது நண்பர் முகேஷ் என்பவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்கு நடந்த தகராறில் வைரவன், இசக்கி ராஜா, முகேஷ் ஆகியோர் தடுத்து தகராறை விலக்கி விட்டனர். இந்நிலையில் குலசேகரன்புதூர் சந்திப்பில் அவர்கள் நிற்கும் போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

குமரி: குளத்தில் இறங்கி தேங்காய் எடுத்தவர் புதரில் சிக்கி உயிரிழப்பு

image

சித்திரங்கோடு ராஜாங்கம் (32) நேற்று குலசேகரம் தாழபிடாகையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது தேங்காய் குளத்தில் விழுந்துள்ளது. குளத்தில் இறங்கி தேங்காய்களை எடுத்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது அவர் பாசி, புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் அங்குச் சென்று குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர்.

News September 23, 2025

குமரியில் முக்கிய ரயில் சேவை மாற்றம்

image

கட்டாக் ரயில் நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 16318 ஸ்ரீ வைஷ்ணோதேவி கத்ரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செப்.22 முதல் அக்.2 வரை கத்ராவிலிருந்து புறப்படும்போது பராங்க் ஜங்ஷன், கப்லியாஸ் இடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பதில் ரெயில் கட்டாக் நிலையத்தை தவிர்த்து  நராஜ் மரத்தபூர் வழியாக இயங்கும். நராத் மரத்தபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

News September 22, 2025

குமரி: பேரூராட்சி தலைவர் பதவி ரத்துக்கு தடை

image

தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதா ராணி பதவியை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞருமான தளவாய் சுந்தரம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து மதுரை நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தெரிவித்தார்.

error: Content is protected !!