News March 23, 2025
தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News March 26, 2025
மனோஜ் இறப்புக்கு காரணம் என்ன?

பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு (48) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கடந்த வாரம்தான் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென்று 2வது முறையாக மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
News March 26, 2025
என்கவுன்ட்டர் சம்பவத்தில் நடந்து என்ன?

சென்னை என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் புகாரியை நோக்கி கொள்ளையன் ஜாபர் 2 முறை துப்பாக்கியால் சுட்டபோது, குண்டுகள் ஜீப்பில் பாய்ந்தன. இதனால், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுட்டபோது, நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 26, 2025
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் CBI சோதனை!

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 10ஆம் தேதி ED அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று ராய்பூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதலே CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் வாகனங்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கல் எறிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.