News March 23, 2025

கலவரக்காரர்களிடம் இருந்தே காசு வசூல்

image

நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.

Similar News

News March 26, 2025

பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்: தினகரன்

image

தமிழக அரசியலில் அண்ணாமலை நெருப்பாக செயல்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணாமலை எதிரிகளுக்கு அக்னியாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் அண்ணாமலையார் தீபம் போன்று இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பெயரை சொன்னாலே திமுக நடுங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

image

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

News March 26, 2025

திருஷ்டி தோஷம் போக்கும் திருநீறு

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், குடும்ப நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டாம். ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!