News March 23, 2025
தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி

சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.
Similar News
News August 17, 2025
மயிலாடுதுறை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்
News August 17, 2025
மயிலாடுதுறை: இப்படி ஒரு வரலாறு நிறைந்த இடமா?

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 17, 2025
மறைந்த இல உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைதி பேரணி

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி பூங்கா அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வர மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.தொடர்ந்து இல கணேசன் திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.