News March 23, 2025
பேச்சுவார்த்தையில் செங்கோட்டையன் சமாதானம்

இபிஎஸ்சை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவருடன் அதிமுகவின் மூத்தத் தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செங்கோட்டையன் சமாதானம் ஆனதாகக் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய அதிமுக நிர்வாகிகள், இபிஎஸ்- செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு இல்லை, 2026 தேர்தலே அதிமுக இலக்கு எனக் கூறியுள்ளனர்.
Similar News
News March 26, 2025
நடிகராக விரும்பாத மனோஜ்…!

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் முதன்முதலாக தாஜ்மஹால் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பழைய பேட்டி ஒன்றில் <<15885902>>மனோஜ்<<>> நினைவுகூர்ந்தார். அப்போது, ‘அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க ஆசை இருந்தது. ஆனால், நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை’ என அவர் கூறினார். கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல்தான் தாஜ்மஹால் படத்தில் நடித்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.
News March 26, 2025
‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.
News March 25, 2025
ஜீரோக்களில் ஹீரோ: மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்!

பஞ்சாப் அணியில் விளையாடிவரும் மேக்ஸ்வெல் இன்றைய ஆட்டத்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை(19) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மாறியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை வீரர் ரோகித் சர்மா (18), முன்னாள் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்(18) ஆகியோர் உள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?